ஒன்று சேரும் பாக்கியா, ராதிகா.. வெளியே வரும் கோபியின் சுயரூபம் – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை பற்றி கோபி சொன்னதை நம்பி ராதிகா நடந்து கொள்ள, தற்போது கோபி எந்த அளவிற்கு சுயநலவாதி என்ற உண்மை ராதிகாவுக்கு புரிய வருகிறது
பாக்கியலட்சுமி
விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத பாக்கியலட்சுமி சீரியலில், பல ட்விஸ்ட் வர இருக்கிறது. ராதிகா இனிமேல் பாக்கியா வீட்டில் தான் தங்குவேன் என சொல்ல, பல பிரச்சனைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இனி வரும் எபிசோடில் கோபியின் உண்மையான குணம் ராதிகாவுக்கு தெரிய வர இருக்கிறது. அதாவது இத்தனை நாள் இனியா என்னுடைய மகள் என கொஞ்சிய கோபி, இன்று இனியா ரூம் இல்லாமல் ஹாலில் தூங்கியதை நினைத்து கவலைப்படவே இல்லை.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? Axis Finance Limited-ல் சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
மேலும் இரவு நடந்த சண்டை எல்லாம் மறந்து காலை வாக்கிங் செல்கிறார். அது மட்டுமில்லாமல் வீட்டில் நடப்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் காபி கேட்க, அப்போ பாக்கியா பற்றி கோபி சொன்னது எல்லாம் பொய் என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிய வருகிறது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் ராதிகாவும், பாக்கியாவும் ஒன்று சேர்ந்து கோபியை ஒரு வழி செய்ய இருக்கின்றனர். அதனால் இனி பாக்கியலட்சுமி சீரியல் கதைக்களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download