ஜெனியை ஏமாற்றும் செழியன்.. கேள்வி கேட்டு அவமானப்படும் கோபி- “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில், செழியன் தடம் மாறி செல்கிறார். அந்த விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அம்மா வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுபக்கம் பாக்கியா கேரளாவிற்கு சென்று இருப்பதால் செழியனை சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் செழியன் வாழ்க்கையில் மாலினி வருகிறார். அப்பா போலவே செழியனும் ஜெனியை ஏமாற்றுகிறார். பாக்கியாவிற்கு செழியன் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அவர் போன் செய்து ஜெனியை பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். ஆனால் செழியன் அதை எல்லாம் கேட்காமல் மது மயக்கத்திற்கு அடிமையாகுகிறார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது. மகன் தடம் மாறி செல்கிறான் என கோபி அவனுக்கு அட்வைஸ் செய்கிறார்.
பெட்ரோல், டீசலின் விலை திடீர் உயர்வு – லிட்டர் ரூ.331க்கு விற்பனை!
ஆனால் செழியன் நீங்களே ஒழுங்காக இல்லை அதனால் என்னை சொல்லக்கூடாது என சொல்கிறார். இதை கேட்டு கோபிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடுத்து என்ன நிகழும் என்பது பரபப்பாக உள்ளது.