ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிபந்தனை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழக சட்டசபை தேர்தலின் போது ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்:
தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் மாவட்ட வாரியாக உள்ள தேர்தல் அதிகாரிகளால் முழு வீச்சில் நடத்தப்படுகிறது. தேர்தல் பணிக்காக தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும்.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முறையில் மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
வேலூர் மாவட்டம்:
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகளுக்கு 1,301 ஓட்டுச்சாவடிகளும், 482 துணை ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளது. ஒட்டுப் பதிவின் போது 7, 500க்கும் அதிகமானவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதில், அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் எந்த பணியில் அமர்த்தப்பட்ட உள்ளனர் என்பது குறித்த விவரங்களா மற்றும் ஆசிரியர்கள் விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
நிபந்தனை:
தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏப்ரல் 7ம் தேதி வரை தாங்கள் பணிபுரியும் தலைமை இடத்தை விட்டு வெளியேறவோ அல்லது விடுமுறை எடுக்கவோ கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
கட்சி சார்பில்லாதவங்களா நியமியுங்கள்