தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முறையில் மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
தமிழகத்தில் தலைமை ஆசிரியர் பணிக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே பதவி உயர்வுக்கான தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கான காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்த தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக மேல்நிலை பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடத்த கடந்த வாரம் அரசு உத்தரவிட்டிருந்தது.
மார்ச் 9 குமரியில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
வழக்கு:
பதவி உயர்வு பெரும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த பிப்ரவரி 20 ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கிடாதிருக்கை அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மதுரை உயர்நீதிமன்றத்தில் கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் இடம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக ராமநாதபுரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டேன். 2020 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை.
தற்போது பதிவு உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலருக்கு பணி மாறுதல் ஏற்படும். எனவே பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்”, இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் ஏப். 30-க்குள் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்