பதிவு சான்றிதழ் பெறுவதில் புதிய நடைமுறை – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. வலுக்கும் எதிர்ப்புகள்!
தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் நேரில் வந்து பெற்று கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
பதிவு சான்றிதழ்:
தமிழகத்தில் புதிய வாகனங்களுக்கான பதிவுச் சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்று ஆகியவற்றை வாகன உரிமையாளர்கள் அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் வந்து பெறாவிட்டால் தபால் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஐபோன் யூசர்களுக்கு நிறுவனம் கொடுத்த அலர்ட் – இனி ஜார்ஜ் போடும் போது அலர்ட்டா இருங்க!
இந்த நடைமுறைக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாகன உரிமையாளர்கள் பெரும்பாலானோர் ஓட்டுநராக உள்ளனர் . அதனால் தினசரி வேலையில் ஈடுபட வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் அவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து சான்றிதழை பெறுவது சற்று இயலாத காரியம்.
அதனால் பதிவு மற்றும் தகுதி சான்றிதழை அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும்,.பி ரெஜிஸ்டர் நடைமுறையில் புதிய வாகனங்களுக்கு அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.