ஐபோன் யூசர்களுக்கு நிறுவனம் கொடுத்த அலர்ட் – இனி ஜார்ஜ் போடும் போது அலர்ட்டா இருங்க!
மக்கள் மத்தியில் தற்போது ஆப்பிள் போன் மோகம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்வது குறித்து ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
மக்கள் பலர் தற்போது காலை முதல் இரவு வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் நல்லது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் கெடும் இருக்கிறது. அதாவது பல இடங்களில் செல்போன் வெடித்து உயிர் போன சம்பவங்கள் நடந்துள்ளது. அதனால் செல்போனை சார்ஜ் செய்து அதனை அருகில் வைத்து கொண்டு தூங்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் QR கோடு மூலமாக பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம் – மாநகராட்சி புதிய திட்டம்!
மேலும் ஐபோனை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும் எனவும், சார்ஜில் இருக்கும் போது அருகில் வைத்து கொண்டு தூங்க வேண்டாம் எனவும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இரவு தூங்கும் போது போர்வை அல்லது தலையணைக்கு அடியில் போன்களை வைத்தாலும் அது வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.