காபூல் குண்டுவெடிப்பு: ‘தேடிவந்து வேட்டையாடி பலி தீர்ப்போம்’ – அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் காபூல் நகரின் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம், தேடி வந்து பலி தீர்ப்போம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் எச்சரிக்கை:
ஆப்கானிஸ்தானின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தலிபான் தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15 அன்று கைப்பற்றியதால் அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு தானாகவே வெளியேறி அமெரிக்காவில் குடியேற உள்ளதாக தகவல் பரவி வந்தது. மேலும் அவர் வெளியேறிய போது மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே, அதாவது போர் பதற்றத்தை தடுக்கவே நாட்டை விட்டு தாம் வெளியே செல்வதாக தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து போர் முடிவுக்கு வருவதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்து இருந்தனர்.
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 44,658 பேருக்கு தொற்று! 496 பேர் உயிரிழப்பு!
இந்நிலையில் பிரேசில், ரஷ்யா போன்ற பல நாடுகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டபடி இந்த மாத இறுதியான ஆகஸ்ட் 31 க்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என அறிவித்து இருந்தார். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க, தினமும் ஆப்கானை விட்டு வெளியேறும் நபர்கள் காபூல் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள், அவசரம் வேண்டாம் என அதிபர் அறிவித்து வந்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு – 13 பேர் உயிரிழப்பு!!
இந்த நிலையில், திடிரென இன்று காலை விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில மணித்துளிகளில், பக்கத்தில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் 73-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. தாக்குதலில், அமெரிக்க கப்பற்படையை சார்ந்த மாலுமிகள் 12 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஐ எஸ் தீவிரவாதிகளின் பங்கு இருப்பதை அந்த அமைப்பே உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜோ பைடன், இந்த செயலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம், தேடி வந்து பலி தீர்ப்போம் என உணர்ச்சி பொங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.