இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 44,658 பேருக்கு தொற்று! 496 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 496 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,658 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,03,188 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்த தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேற்று இரு மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு – இன்றைய நிலவரம்!
மேலும் இந்தியாவில் புதிதாக 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,36,861 ஆக அதிகரித்துள்ளது. நேற்றை விட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இன்று அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 61,22,08,542 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 32,988 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 3,18,21,428 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.60% ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,44,899 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.06% என்ற நிலையில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.