ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு – 13 பேர் உயிரிழப்பு!!

0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு - 13 பேர் உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு - 13 பேர் உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு – 13 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தற்போது காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காபூல் குண்டுவெடிப்பு:

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றினர். அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது. ஆனால் தலிபான் அந்த அதிகாரத்தையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கைப்பற்றியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைபற்றிய பிறகு, தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தாலிபான்கள் முல்லா ஷிரினை காபூலின் ஆளுநராக நியமித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு – இன்றைய நிலவரம்!

ஆப்கானை கைப்பற்றியதிலிருந்து, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளிலும் தலிபான் பயங்கரவாதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். மேலும், காவல்துறையினரும், வீரர்களும் சரணடைந்துள்ளனர் அல்லது நகரங்களை விட்டு வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர். ஆப்கானிஸ்தானில் வங்கிகளுக்கு வெளியே மக்கள் கூட்டம் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உள் மற்றும் வெளிநாட்டினர் என பலரும் நாட்டைவிட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இம்மாத இறுதிவரை அமெரிக்க படைகள் நாட்டைவிட்டு வெளியேற தலிபான்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், அதுவரை விமான நிலைய கட்டுப்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர். அதே போல மற்ற நாடுகள் அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்கான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள், தலிபான்கள் மற்றும் பொதுமக்களில் பலர் காயம் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் அந்த நாட்டு மக்கள் தற்போது இந்த வெடிகுண்டு சம்பவத்தில் மேலும் உயிர் பயத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!