பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயராது..!!! ” அமைச்சர் அறிவிப்பு”..!!
2001-2002 கல்வி ஆண்டில் இருந்து தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் வரும் நவம்பர், டிசம்பரில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில், தங்கள் அரியர் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்றும் மேலும், செமஸ்டர் தேர்வுக் கட்டணம் உயர்வதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து, தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்வு குறித்து மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு கட்டணம் உயராது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

























