நிமோசில் நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிமுகம்!!
இந்தியாவில் நிமோசில் என்ற நோயிற்கான முதல் தடுப்பூசியினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் மருத்துவ அமைப்பு மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து தயாரித்துள்ளது.
நிமோசில் தடுப்பூசி:
உலக அளவில் நிமோசில் நோய் பாதிப்பினால் ஐந்து வயதிற்கு உட்பட 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயிற்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி நாட்டில் உள்ள 67 ஆயிரம் குழந்தைகளை இந்த நோய் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடியின் “ஆத்மனிப்பார்” திட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த தடுப்பூசி உதவும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்:
இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் அமைச்சராக ஹர்ஷ்வர்தன் உள்ளார். இந்த அமைச்சகத்தின் மாநில அமைச்சராக ஃபகன் சிங் குலாஸ்டே உள்ளார். இதன் தலைமையிடம் டெல்லியில் உள்ளது.
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
சீரம் இன்ஸ்டிடியூட் சைரஸ் பூனவல்லா என்பவரால் 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக அடல் பூனவல்லா உள்ளார். இதன் தலைமையகம் புனேவில் உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்