உரிமைகோரப்படாத சேமிப்பு தொகை – ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு – நடவடிக்கை தீவிரம்!
10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி கணக்கில் பயன்படுத்தாமல் கிடப்பில் இருக்கும் தொகையை உரிமையாளரிடம் ஒப்படைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி:
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பலரும் வெகு மாதங்களாக வங்கி கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இவ்வாறு, பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் கிடப்பில் கிடக்கும் தொகையை உரியவரிடம் கொண்டு சேர்க்க ரிசர்வ் வங்கி போராடி வருகிறது. அதாவது, வங்கி கணக்கு விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இறப்பது, வங்கி பாஸ்புக்கை தொலைத்துவிட்டு அப்படியே விட்டு விடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கியில் கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி உரிமைகோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
அந்த வங்கி பணத்தை உரியவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பொருட்டு UDGAM என்கிற இணையதளத்தை ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளது. இது வரை, இந்த இணையதளத்தில் 30 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தாமல் வங்கி கணக்கில் இருக்கும் உரிமைகோரப்படாத தொகையை சம்மந்தப்பட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்துள்ளது. இந்த தொகையை ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் வாரிசுதாரர்கள் மூலமாக பணத்தை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.