இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக். 7க்கு பின் அவகாசம் – முழு விவரம் இதோ!
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கு பின் கூட எப்படி மாற்றலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
2000 ரூபாய் நோட்டுகள்
நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மே 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு செப். 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் படி 96 சதவீதம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே மாற்றப்பட்டு இருப்பதால் அக். 7 வரை கால அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வாங்கி அறிவிப்பு வெளியிட்டது.
உரிமைகோரப்படாத சேமிப்பு தொகை – ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு – நடவடிக்கை தீவிரம்!
இந்நிலையில் நாளையுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. அதற்கு பின் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என ஆர்பிஐ தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு பின் கூட இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லும். ஆனால் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த நோட்டுகளை சமர்ப்பித்து வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்ற முடியும். தபால் மூலமாகவும் ஆர்பிஐ அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொது மக்கள் அனுப்பி மாற்றலாம். அரசு துறைகள் வரம்பு ஏதுமின்றி 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றி கொள்ள முடியும்.