“நான் கைது செய்யப்படுவது உதயநிதி ஸ்டாலினால் தான்”..!! “கார் ரேஸ் முடியும் வரை”…சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி..!!
இன்றைய காலக்கட்டத்தில், பலர் மக்களிடையே பிரபலமாக வேண்டுமென்றும், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றும் யூடியூப் மூலம் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி யூடியூபராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், சவுக்கு சங்கர் என்பவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான யூடியூபர் ஆவார். தற்போது, அவர் பத்திரிக்கையாளரிடம் அளித்துள்ள பேட்டி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள் … டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !!
இதற்கு காரணம் அமைச்சர் தான்;
கடந்த மே மாதத்தில் காவல்துறையினரால் கைதான சவுக்கு சங்கர் ,சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார். அவர் தற்போது, சிவகங்கை நீதிமன்றத்திற்கு முன் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் “சென்னையில் நடக்கவிருக்கும் கார் ரேஸ் முடியும் வரை, நான் வெளியே வரக்கூடாது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதனால்தான், “நான் தொடர்ந்து புதிய புதிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகிறேன்” என்று அவர் பத்திரிக்கையாளரிடம் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


























