எம்.பில், பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பின் படி எம்.பில், பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் ஆய்வறிக்கை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக எம்.பில், பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பினை பரிசீலனை செய்த உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்படுவதாக அறிவித்தனர். தற்போது வரை கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் ஆராய்ச்சி படிப்புகளுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இன்னும் 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!!
இது குறித்து யுஜிசி செயலாளர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பின் படி, “கொரோனா காரணமாக ஆராய்ச்சி படிப்புகளுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் மீண்டும் 6 மாதங்கள் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்.பில், பிஎச்டி படிப்புகளுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்கள் அவகாசம் வழங்க வேண்டும்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.