சென்னையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என சென்னை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடி மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க உத்தரவிட்டார்.
TN Job “FB Group” Join Now
மேலும் இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக காவல், மருத்துவ துறையினர், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் மூட வலியுறுத்தல் – 65 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், “தமிழகத்தில் குறிப்பாக சென்னை முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவி வருவதால் மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி காரணமாக பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. சென்னையில் மட்டும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும்.
இனி தமிழிலும் ‘இன்ஜினியரிங்’ படிக்கலாம் – புதிய தேசிய கல்விக்கொள்கை!!
மேலும் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மை இல்லை. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் 30 ஆயிரம் பேரில் 10000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.