
தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை…!! 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்…!!
தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, “எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவனம் சார்பில் 5000 கோடி முதலீட்டில் கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க” திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது . இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் 45,000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூரில் இந்த காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைவதால் அம்மாவட்டத்தில் உள்ள தனி நபர்களின் வருமான அதிகரிக்கும் எனவும் பொருளாதாரம் மேம்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


























