மாநாட்டின் போது சாலை விபத்தில் உயிரிழந்த தொண்டர்கள்.. நிதியுதவி வழங்கிய தவெக தலைவர் விஜய்..
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தொண்டர்கள் பைக், கார் மற்றும் பேருந்தில் வந்தனர். இதனால் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்கள் சிலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இனி, 300-க்கும் மேற்பட்ட E-சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம்…!! ” மத்திய அமைச்சர் தகவல்”…!!
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்ற போது, “விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் உள்பட திருச்சி, தி.மலையை சேர்ந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியாக தவெக தலைவர் விஜய் வழங்கினார்”. மேலும் குடும்பச் சூழலை பொறுத்து சிலருக்கு கூடுதல் நிதியும், இறந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவையும் தவெக ஏற்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


























