ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு… உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு…
ஜார்க்கண்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் ஹேமந்த் சோரன் ஆளுநர் சந்தோஷ்குமார் கங்வாரை சந்தித்து ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஒப்புதல் பெற்றார்.
இதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று (28-11-2024) பதவியேற்றார். மேலும் ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி” உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


























