
SEBI இன் புதிய தலைவராக பதவியேற்கிறார் முன்னாள் நிதிச் செயலாளர்.. நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) என்பது 1992 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்த அமைப்பானது பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவும், பத்திரச் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் SEBI அமைப்பின் முக்கிய மாற்றம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(01-03-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
அதாவது, “இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செபி அமைப்பின் தற்போதைய தலைவரான மாதபி புரி பூச்சின் மூன்றாண்டு பதவிக்காலம் இன்றுடன் (28-02-2025) முடிவடையும் நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் நிதிச் செயலாளராக பதவி வகித்த காந்த பாண்டே முன்னர் நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய்த் துறையை வழிநடத்தினார்” என்பது குறிப்பிடத்தக்கது.


























