இந்திய ரயில்வே காலிப்பணி இடங்கள் நிரப்புதல் – டிஆர்இயூ கோரிக்கை!!
மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டிஆர்இயூ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே துறை:
இந்திய ரயில்வே துறை தான் நாட்டின் மிகப்பெரிய துறையாகும். RRB ரயில்வே துறைக்கான பணியாளர்களை தேர்வு செய்கிறது. பணியாளர் தேர்வுகள் ஆர்ஆர்பி வாரியம் மூலம் நடத்தப்படும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடம் பணியாளர் நியமனத்துக்கான தேர்வு நடத்தப்படவில்ல.
இந்திய பார் கவுன்சில் தேர்வில் புதிய மாற்றம் அமல்!!
திருநெல்வேலி பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்கள் வந்தார். அவரிடம், கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் தலைமையில் யூனியன் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து மனு ஒன்றை வழங்கினார்கள்.
கோரிக்கை மனு:
தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வழங்கிய மனுவில், ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, இன்ஜின் டிரைவர் போன்ற பாதுகாப்பு பணியில் காலிப்பணி இடங்கள் உள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும், எல்லா ரயில்வே கேட்களிலும் 8 மணி நேரம் பணியை உறுதி செய்ய வேண்டும். காரைக்குடி, தூத்துக்குடி ரயில்வே மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலாக டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Job