தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு வழக்கு – மத்திய அரசு பிரமாண பாத்திரம் தாக்கல்!!
மாநில அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு:
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சமூகத்திற்கு வழங்கப்படும் 69% இடஒதுக்கீடு காரணமாக கல்வி மையங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இடம் கிடைக்காத காரணத்தால் அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்குமாறு கூறினர்.
TN Job “FB Group” Join Now
இதன்படி மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் உதவி செயலாளர் என்.எஸ். வெங்கடேஸ்வரன் பிரமாண பாத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை, “இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள சமூகத்தினரை அந்த மாநிலத்தின் அனுமதியுடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஜனாதிபதிக்கு அனுமதி உண்டு. அதேபோல அந்த பிரிவினருக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அனுமதி உண்டு.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான திறனறிவு தேர்வு – தேதி அறிவிப்பு!!
எனவே இந்த முடிவில் மத்திய அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை. இதேபோன்று ஏற்கனவே அரசியலைப்பு சாசனம் 102வது திருத்தத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்ற அமர்வு முன் உள்ளது”, என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த விசாரணையை வருகிற 25 ஆம் தேதிக்குள் தள்ளிவைத்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்