தமிழகத்தில் முக்கிய வழித்தட ரயில்கள் முழுவதுமாக ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் கோவை – சேலம் இடையேயான ரயில் உட்பட 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ரயில்கள் ரத்து:
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் சேவையை நாடுகின்றனர். இந்த நேரத்தில் மக்களுக்கு இடையூறு இன்றி சிறந்த முறையில் சேவையை வழங்கும் நோக்கில் ரயில்வே துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அவ்வப்போது ரயில்கள் மற்றும் அவை செல்லக்கூடிய வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
அதன்படி பிப். 3ம் தேதி முதல் சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் காரணமாக கோவை – சேலம் இடையே இயக்கப்படும் ரயில் (06802) பிப் 3, 4, 6,10,11,13,17,18, 20, 24, 25, 27 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது. அடுத்ததாக கரூர் – திருச்சி இடையே பிற்பகல் 3.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் (06882) பிப்ரவரி 14, 21, 28 ஆகிய 3 நாட்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து விருத்தாசலம் – சேலம் இடையே காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (06121) பிப். 14, 21, 28 ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு – திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் (16844) பிப்ரவரி 14, 21, 28 மஜ் தேதி கரூருடன் நிறுத்தப்படும். அடுத்தாக திருச்சி – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயிலானது (06809) பிப்ரவரி 14, 21, 28 தேதிகளில் கரூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.