தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென் கிழக்கே சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையின் சிறப்பம்சங்கள்!
அடுத்தாக பிப்.1ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பிப்.3 அன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். மேலும் பிப். 3,4ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக முட்டத்துடன் காணப்படும். ஜன. 31 மற்றும் பிப். 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடல், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 60 கி. மீ வேகத்தில் வீசகூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.