முக்கிய நாட்களில் ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் புதிய வசதியை ஐ ஆர் சி டி சி அமல்படுத்தியுள்ளது.
ரயில் டிக்கெட்
மக்கள் பலர் ரயில்களில் பயணம் செய்வது அதிகமாக விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயிலில் பயணம் செய்வதால் ரயிலில் டிக்கெட் பெறுவது என்பது பெரிய சவாலாக ஒன்றாக இருக்கிறது குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் களுக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் முக்கிய நாட்களில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காமல் போனவர்கள் ஏற்கனவே டிக்கெட் பெற்று அதனை ரத்து செய்தவர்களின் டிக்கெட்டை வைத்து பயணம் செய்யும் புதிய வசதியை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் வேறு ஒருவரின் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டில் நீங்கள் எளிதாக பயணம் செய்யலாம். ஆனால் அதற்கு முன் சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் அடையாளத்தை வழங்க வேண்டும்.
SSC JE வேலைவாய்ப்பு 2024 – 968 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!
அந்த நம்பருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும். இதற்கு உங்களுடைய அடையாள அட்டை கேட்கப்படும் இரண்டையும் சரிபார்த்த பின் டிக்கெட் மாற்றி தரப்படும் இருந்தாலும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் பரிமாற்றத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் டிக்கெட் மாற்ற முடியாது.