ரயில் சேவையில் சில மாற்றங்கள்..!! பயணிகளுக்கு முன்னறிவிப்பு..!! ரயில்வே துறை தகவல்..!!
மதுரை ரயில்வே கோட்டத்தில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் ரயில் சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட போவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை-மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல் – மதுரை – மணப்பாறை வழியாக செல்வதற்கு பதிலாக திருச்சி-விருதுநகர் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (19.09.24) முக்கிய இடங்களில் மின்தடை… எந்தெந்த ஏரியாக்கள்?? முழு விவரம் இதோ!!
மேலும், குருவாயூர் – சென்னை விரைவு ரயில் செப். 23 , 25, 26, 27 மற்றும் அக்.2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்றும் மற்றும் ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.
























