தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை (11.04.2025) விடுமுறை…!! அரசு அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் நாளை பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் மட்டும் கொண்டப்படும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின், போது மக்கள் அதனை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நாளைய விடுமுறை தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .
TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை உச்சத்தை தொடும்.. வானிலை ஆய்வாளர் வெளியிட்ட தகவல்..!!
அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டப்படுவது வழக்கம். இதனால், நாளை அந்த மாவட்டத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்ட விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். அதாவது, நாளை தேர்வு எழுதுபவர்களை தவிர, விடுமுறை கோரும் மற்ற அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும்.



























