மக்களே உஷார்…தமிழகத்தை வாட்டவரும் மீண்டும் ஒரு “புயல்”…!! ” முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 வாரத்திற்கு முன் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததை தொடர்ந்து, தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், சில மாவட்டங்களில் இடைவிடாமல் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் , தற்போது தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் பெய்யவிருக்கும் கனமழை எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.



























