இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!

தமிழகத்தில் நேற்றை பொறுத்த வரையிலும் ஓரிரு இடங்களில் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் 3 சென்டிமீட்டர் அளவு மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

NCRTC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – ரூ.2,80,000/- சம்பளம்!

இதேபோல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தமிழகம் தென் மாவட்டங்களில் லேசான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் அசவுகரிய நிலையை சந்திக்கலாம். மேலும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!