அரசு பணிகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மக்கள் மத்தியில் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார்.
அரசு வேலை:
தற்போது மத்தியில் நடந்துவரும் பாஜக அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து இந்தியா கூட்டணி என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் மத்தியில் தெரிவித்தார். அதன்படி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களின் மூலம் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக ரூபாய் 5000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள யுவரோஷினி திட்டத்தை பற்றி மக்களிடையே விவரித்துள்ளார். மேலும் மத்திய அரசின் சைனிக் பள்ளிகளை தனியார் மையமாக்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் குடியரசு தலைவரிடம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.