தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கொரோனா உறுதி !!!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு நிலவரம்:
தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்து உள்ளது.
ரேஷன் கடைகளில் 19க்கு அதிகமான மலிவு விலை மளிகைப் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு..!
மேலும் இதுவரை 180 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு விவசாய பணிகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை தொடங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
கொரோனா நடவடிக்கைகள்:
தமிழகத்தில் இதுவரை 97.9% குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு 2 நாட்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காய்கறிகளின் விலை மிக மிக குறைவாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவலைக் கொண்டு தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் என யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும் முதல்வர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
1.5 லட்சம் பேருக்கு சம்பள உயர்வு – ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்