இன்றும் சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
இன்றும் சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இன்றும் சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இன்றும் சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

சென்னையில் உள்ள 3 பள்ளிகளில் இன்று தூய்மைப்பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது வரையிலும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் படகுகள் மூலமாகவே வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து வசதி பெருமளவில் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயலின் காரணத்தினால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற தொடரும் சிக்கல் – செவிசாய்க்காத அரசு! வலுக்கும் கோரிக்கை!

தற்போது ஓரளவுக்கு கனமழையில் தாக்கம் குறைந்திருக்கும் நிலையில் நேற்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் மழைநீர் இன்னும் மொத்தமாக வடியாத நிலையில் அந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்ன போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் இன்று தூய்மை பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!