தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற தொடரும் சிக்கல் – செவிசாய்க்காத அரசு! வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற தொடரும் சிக்கல் - செவிசாய்க்காத அரசு! வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற தொடரும் சிக்கல் - செவிசாய்க்காத அரசு! வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற தொடரும் சிக்கல் – செவிசாய்க்காத அரசு! வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என அரசிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உரிமைத்தொகை

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கடந்த செப்.15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அதனால் தகுதி உள்ள பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என குற்றசாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் பலர் இந்த உரிமைத்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் 4 சக்கர வாகனத்தை கருத்தில் கொண்டு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது உரிமைத்தொகை வழங்க விஏஓக்கள் கணக்கெடுப்பு செய்யும்போது, தாங்கள் பயன்படுத்தும் 3 சக்கர வாகனங்களை, நான்குசக்கர வாகனம் இருப்பதாக பதிவு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை கண்டித்து கடந்த மாதம் 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர்களிடம் 2000 மனுக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ராமநாதபுரத்தில் மட்டும் 2000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதை மறுபரிசீலனை செய்து, தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு உத்தரவிடவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!