
தமிழகத்திற்கு இன்று(டிசம்பர் 7) 7 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு..!! ” எந்தெந்த மாவட்டம் தெரியுமா”..??
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக உருவெடுத்ததை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், “ஃபெஞ்சல்” புயலால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்திய பொது சுகாதாரத்தின் தலைவர் மற்றும் இயக்குனரான ராகேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழு, மேலே குறிப்பிட்டுள்ள 3 தமிழக மாவட்டங்களை இன்று(டிசம்பர் 7) ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.























