வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் – அதிகாரிகள் தகவல்!!
2019-2020ம் நிதியாண்டிற்கான வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த 2020 ஜூலை மாதம் முதல் வழங்கப்பட்டு வந்த கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
கொரோனா ஊரடங்கு:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பொருளாதார நலிவினால் பொதுமக்கள் கடும் பதிப்படைந்தனர். இதனால் வழக்கமாக ஜூலை 31ம் தேதி வரை வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு வழங்கப்படும் அவகாசம் சென்ற ஆண்டில் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர்களுக்கு புதிய சுற்றறிக்கை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
தணிக்கை கணக்கு:
வருமான வரிக்கணக்கு தணிக்கை செய்வதற்கு அவசியம் இல்லாதவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கும், தணிக்கை செய்ய வேண்டியவர்கள் பிப்ரவரி 15ம் தேதி வரை அபாரதமின்றி தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அபாரதமின்றி தாக்கல் செய்ய விரும்புபவர்கள் பிப்ரவரி 15ம் தேதிக்குள் தாக்கல் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
அபராதம்:
அதன்படி, அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.10,000 அபாரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்