தலைமை ஆசிரியர்களுக்கு புதிய சுற்றறிக்கை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் 9-12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கல்வித்துறையின் இணையத்தில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய்பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது தான் படிப்படியாக திறக்கப்படுகிறது. தற்போது வரை 9 முதல் 12ம் வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய ஊதிய விகிதம் அமைக்க குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!!
பாதுகாப்பு விதிமுறைகள்:
பள்ளிகள் திறப்பதற்கு அனுமதியளித்தாலும் இன்னும் கொரோனா நோய் பரவல் நிலை முழுமையாக நம்மை விட்டு செல்லாத காரணத்தால் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டு பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
அரசின் புதிய செயலி:
பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதில் உள்ள 24 கேள்விகளுக்கும் அனைத்து நாட்களிலும் தவறாது பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொறுப்பும் தலைமை ஆசிரியர்களையே சேரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. இப்பணியினை கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்