இந்தியாவில் இந்து மற்றும் ஜெயின் மதத்தினர் சார்பில் அட்சய திருதியை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என நம்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு நகைக்கடைகளில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
TNPSC Group 1 Prelims Syllabus – Download Exam Pattern!!
கடந்த ஆண்டுகளில் இருந்து வந்த தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது தற்போது பல மடங்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. தற்போது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை முன்னிட்டு GOLD BOND, GOLD ETF போன்ற திட்டங்களில் முதலீடு மக்கள் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் ரூ.6,705க்கும், ஒரு சவரன் ரூ.58,520க்கும் விற்கப்பட்டு வருகிறது.