கதிரை அடிக்க வந்த அடி ஆட்கள்.. ஜீவாவை உதவிக்கு அழைத்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரை அடிக்க ஆட்களை எதிர் டீம் ஏற்பாடு செய்ய அதனால் முல்லை பயத்தில் இருக்கிறார். மறுபக்கம் பார்வதியிடம் முல்லை மற்றும் கதிர் போட்டிக்கு சென்று இருப்பதை ஜீவா கேட்டு தெரிந்து கொள்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் முல்லை சாப்பிட கிளம்ப வெளியே சில ஆட்கள் நிற்கின்றனர். அவர்களை பார்த்து முல்லை பயப்படுகிறார். உடனே கதிர் அவர்களை பார்த்து ஏன் பயப்படுகிறாய் என கேட்க, அவங்க உங்களை அடித்து விடுவதாக பேசியதாக முல்லை சொல்கிறார். கதிர் அப்படி எதுவும் நடக்காது நீ தைரியமாக இரு என சொல்கிறார். மறுபக்கம் தனம் கதிருக்கு என்ன நடந்திருக்கும் என தெரியாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கயல் தூங்காமல் இருக்கும் சத்தம் கேட்கிறது. தனம் சென்று ஜீவாவை கூப்பிடுகிறார். அப்போது கயல் தூங்கவில்லையா என கேட்டுவிட்டு, ஜீவாவிடம் எனக்கும் தூக்கம் வரவில்லை என தனம் சொல்கிறார். அப்போது தனம் கதிருக்கு என்ன ஆச்சு என வருத்தமாக இருப்பதாக சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
நீ நாளைக்கு அவங்களுக்கு போன் செய்து பார், பத்திரப்பதிவு இருக்கு என தெரிந்து ஏன் வரவில்லை என தனம் கேட்கிறார். இருவரின் போன் Switch off செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தான் பயமாக இருக்கிறது என தனம் சொல்கிறார். முல்லை தோழி வீட்டிற்கு சென்று இருப்பதாக முருகன் மாமா சொன்னதாக ஜீவா சொல்கிறார். பின் எதுவும் பிரச்சனை இருக்காது நீங்க குழப்பத்தில் இருக்காதிங்க என ஜீவா ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் ஜீவா முதல் வேலையாக கதிர் கடைக்கு வருகிறார். அவர்கள் எங்கே என முருகனிடம் கேட்க, அவர் என்ன ஆச்சு என தெரியவில்லை என பதட்டத்தில் இருக்கிறார்.
அப்போது பார்வதி முல்லை எனக்கு போன் செய்து போட்டிக்கு சென்று இருப்பதாக சொன்னதாக சொல்கிறார். பின் ஜீவா நம்பர் வாங்கி கொள்கிறார். பின் கதிரும் முல்லையும் போட்டி நடக்கும் இடத்தில் இருக்க, அப்போது எதிர் டீம் ஆட்கள் சண்டைக்கு வருகின்றனர். முல்லை உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க, அப்போது அவர்கள் கதிரை அடிக்க ஆட்களை ஏற்பாடு செய்து இருக்கின்றனர். முல்லை அதை பார்த்து பதட்டம் அடைய, கதிர் அவர்களை அடிக்க ரெடியாகி இருக்கிறார். அடி ஆட்களை பார்த்து முல்லை பயப்பட, பின் ஜீவா முல்லை போன் செய்த நம்பருக்கு போன் செய்து விவரத்தை கேட்கிறார். அப்போது ஜீவா அவர்களிடம் போனை கொடுங்க என சொல்ல, போட்டி நடத்துபவர் போனை கொடுக்க வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
அந்த நேரம் கதிரை அடிக்க ஆட்கள் வருகின்றனர். முல்லை வேண்டாம் வேண்டாம் என சொல்ல, ஆனால் கதிர் முல்லையை உள்ளே போக சொல்கிறார். போட்டி நடத்துபவர் அப்போது வர, என்ன நடக்கிறது இங்கே என கேட்கிறார். அப்போது உங்களுக்கு போன் வந்திருப்பதாக அவர் சொல்கிறார். முல்லை போனை வாங்கி கொண்டு உள்ளே செல்ல, கதிரை அந்த ஆட்கள் அடிக்க வரும் விஷயத்தை ஜீவாவிடம் சொல்லி, இவங்களும் சண்டைக்கு தயாராக நிற்பதாக முல்லை அழுது கொண்டே சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.