ஜெயிலுக்கு சென்று வந்து மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கிய சர்ச்சை நடிகர்.. தொடங்கப்பட்ட விஜய் டிவி ஷூட்டிங்!
தமிழ் சின்னத்திரையில் தற்போது சில காலமாக பேசு பொருளானது அர்னவ் திவ்யா பிரச்சனை தான். இந்த புகாரால் சிறை சென்ற அர்னவ் தற்போது ஜாமினில் வெளியே வந்து பழையபடி சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அர்னவ் திவ்யா:
சன் டிவி உள்பட பல முன்னணி சேனல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அர்னவ். இவர் சக சீரியல் நடிகையான திவ்யாவுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களின் திருமணம் நடந்தது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் சமீபத்தில் திவ்யா அர்னவ் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். மேலும் கர்ப்பமாக இருப்பது பற்றி கூட யோசிக்காமல் அர்னவ் தன்னை துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
கோபியை டாடி டாடி என அழைத்த மயூ.. வருத்தப்பட்ட இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
Exams Daily Mobile App Download
இதனால் அர்னவை போலீசார் கைது செய்தனர். மேலும் பல நாட்கள் போராடி சென்ற வாரம் தான் அர்னவ்வுக்கு ஜாமின் கிடைத்தது இந்நிலையில் மீண்டும் இவர் விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.