உங்கள் PPF கணக்கு செயலிழந்து விட்டதா..? மீண்டும் அக்கவ்ண்ட் ஆக்டிவேட் செய்ய இதை செய்யுங்கள்..
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது நிலையான வருமானத்தை ஈட்ட உதவும் பிரபலமான முதலீட்டு வழிமுறையாகும். மேலும், அதிக வட்டி, வரி சேமிப்பு, பண பாதுகாப்பு போன்ற காரணங்களால் இத்திட்டம் நிறைய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், எந்தவொரு இந்திய குடிமகனும் PPF திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த குறைந்தபட்சம் தொகையான ரூ.500 டெபாசிட் செய்யப்படாவிட்டால், பிபிஎப் கணக்கு (PPF Account) செயலிழந்துவிடும். அவ்வாறு PPF கணக்கு மூடப்பட்டுவிட்டால்,அதை எளிதாக ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது உங்கள் கணக்கு செயலிழப்பை தடுக்க ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச தொகையை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்தால் போதும். இதை செய்ய தவறினால் நீங்கள் PPF கணக்கு தொடங்கிய வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு சென்று டெபாசிட் செய்யாத ஆண்டிற்கான உரிய நிலுவைத் தொகையை செலுத்தினால் உங்கள் கணக்கு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும். மேலும், தீவிர சிகிச்சை அல்லது குழந்தைகளின் கல்விச் செலவுகள் போன்ற எதிர்பாராத சில சூழ்நிலைகளில் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த வசதி PF கணக்கில் 5 ஆண்டுகள் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


























