ஆன்-லைனில் காவலர் தேர்வை நடத்த TNUSRB திட்டம் ?
தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பரிந்துரைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவலர் தேர்வு ஆன்லைனில் ?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. மேலும் பள்ளி, கல்லுரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், பல்வேறு அரசு பணி தேர்வுகளும் ரத்து செய்யபட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று எந்த நேரத்தில் முடிவுக்கு வரும் என தெரியாத காரணத்தால் வரும் காலங்களில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த ஆணையங்கள் தயாராகி வருகின்றன.
தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் ஆன்லைனில் தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள், காவலர்களிடம் கருத்துக் கேட்கப்படுவதாகவும் கிரேடு-2 காவலர், கிரேடு-2 சிறை வார்டன், உதவி ஆய்வாளர் தேர்வுகளை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் தலா 50 காவலர்களிடன் கருத்து கேட்டு 31ஆம் தேதிக்குள் பதில் அனுப்புமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
TNPSC தேர்வுகள் எப்போது நடத்தப்படும்?
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்