TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – வெற்றி பெற அரிய வாய்ப்பு! உடனே பாருங்க!
தமிழகத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு 444 காலியிடங்கள் உள்ளதாகவும், இதற்கான தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMS DAILY இணையதளம் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது.
மாதிரி தேர்வு:
காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார். தேர்வு வாரியத்தின் அறிவிப்பில் தேர்வுக்கான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பம் 08.03.2022 முதல் 07.04.2022 ம் தேதி வரை இணைய வழியாக பெறப்பட்டது. அரசு பணிக்கான கனவோடு காத்திருக்கும் பலரும் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
ஆனால் காலியிடங்களின் எண்ணிக்கையை விட அதிக மடங்கு பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முதன் முதலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின் படி, தமிழ் மொழி தகுதி தேர்வின் படி நடக்க இருக்கிறது. அதன்படி தேர்வர்கள் தமிழ் மொழி தாளில் 40 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.
இதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMS DAILY இணையதளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது பொதுத்தமிழ் பாட பகுதிக்கு ஆயத்தமாகும் வகையில், ஜூன் 20ம் தேதியான நாளை மாதிரி தேர்வை நடத்துகிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.