TNTET தேர்வின் முறை குறித்தான விவரங்கள்…!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. மொத்தம் இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், நிலை 2ல் தேர்ச்சி பெற்றால் வகுப்பு 6 முதல் 8ம் வரையிலும் ஆசிரியர் பணியாற்ற முடியும்.
குறிக்கோள் வகையிலான தேர்வு 3 மணி நேரங்களுக்கு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மேலும், ஆஃப்லைன் முறை தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். எதிர்மறை மதிப்பெண் இல்லை. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் படித்து, தேர்வில் வெற்றியை உங்கள் வசமாக்குங்கள் தேர்வர்களே..
Follow our Instagram for more Latest Updates
TNTET தேர்வு எழுத போறீங்களா? – Paper I & II தலைப்புகள் என்னென்ன??