
வாரயிறுதியில் சொந்த ஊருக்கு செல்பவரா நீங்கள்..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து கழகம் அறிவித்த முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் உள்ள சாமானிய மக்களுக்காக பொதுப் போக்குவரத்துச் சேவைகளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கேற்ப புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் “மே 16 முதல் 18 ஆம் தேதி வரை வாரயிறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அதன்படி “மே 16 ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 570 பேருந்துகளும், மே 17 ஆம் தேதி மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 605 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது”. இதை தொடர்ந்து, “கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























