ஆலயம்
- கடவுள் திருவடியில் ஆன்மா இலயிக்கும். கோவில் கடவுள் தங்குமிடம்.
- ஆலயம் மூலமே இறைவன் அருளை பொழிகின்றான்.
- கோவில் மனித வடிவம் (ஷேத்திரம் சரீர பிரஸ்தானம்)
பாதம் | கோபுரம் | முழங்கால் | ஆஸ்தான மண்டபம் |
கொப்பூள் | பலிபீடம் | தொடை | நிருத்த மண்டபம் |
மார்பு | மகாமண்டபம் | கழுத்து | அர்த்த மண்டபம் |
சிரம் | கர்ப்பகிரகம் | மார்பில் | நடராஜர் |
வலது செவி | தட்சிணாமூர்த்தி | இடது செவி | சண்டிகேஸ்வரர் |
கழுத்தில் | நந்தி | வாய் | ஸ்நபன மண்டபவாசல் |
மூக்கு | ஸ்நபன மண்டபம் | புருவமத்தி | இலிங்கம் |
தலையுச்சி | விமானம் |
கோபுரம்
• இது ஸ்தூல லிங்கமாகும். இறைவனது விராடஸ்வரூபமே கோபுரம்.
• கும்பம் ஷோடசாந்தமாகும்.
• கோபுர தரிசனம் இறைவனது பாத தரிசனமாகும்.
பிரகாரங்கள்
- 3 பிரகாரம் – அன்ன, பிராண, மனோமய கோசங்களை உணர்த்தும்.
- 5 பிரகாரம் – மேலும் விஞ்ஞான, ஆனந்த மய கோசங்களை உணர்த்தும்.
- 7 பிரகாரம் – மேலும் ஸ்தூல, சூட்சுமங்களை விளக்கும்.
- பல முறை பிரகாரத்தை சுற்றி வலம் வருதல் கோசங்களை கடந்து இறைவன் விளங்குதலைக் குறிக்கும்.
விமானம்
- விமானம் 3 வகைப்படும்.
- பீடம் முதல் அனைத்தும் சதுரம் – நாகரம் (ஆண் விமானம்)
- கண்டம் முதல் வட்ட வடிவம் – வேசரம் (அலி விமானம்)
- கண்டம் முதல் எண்கோண வடிவம் – திராவிடம் (பெண் விமானம்)
- விமானமும் ஸ்தூல லிங்கமாகும். இதன் கீழ்ப்புறம் – முருகன், மேற்புறம் – விஷ்ணு, தென்புறம் – தெட்சிணாமூர்த்தி , வடபுறம் – பிரமன் உருவமும் இருக்கும்.
கொடிமரம்
- இது சூட்சும லிங்கமாகும். சதுர அடிப்பாகம் – பிரமனைக்(படைத்தல்) குறிக்கும்.
- அதன்மேல் எண்கோணம் – விஷ்ணுவைக்(காத்தல்) குறிக்கும்.
- மேல் உருண்டு நீண்ட பாகம் – உருத்திரனைக் (அழித்தல்) குறிக்கும்.
- அசுரரை அகற்றவும், தேவரை வரவழைக்கவும், ஆலயத்தை இரட்சிக்கவும், பக்தர்களை
- காக்கவுமே – கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
- கொடி மரத்தின் மேல்பாகத்தில் அமைக்கப்பட்டிருப்பது – அந்தந்த மூர்த்தியின்
- வாகனம். எ.கா. விநாயகர் – மூஷிகம், சாஸ்தா – குதிரை.
- மூலலிங்கத்துக்கு செய்யும் அனைத்து மரியாதைகளும் – கொடிமரத்திற்கு உண்டு.
- கொடிமரத்திற்கு உகந்த மரங்கள் – முகில், சந்தனம், தேவதரு, செண்பகம், வில்வம்.
- கொடிமரத்திற்கு மத்திமமான மரங்கள் – மா, பலா.
- கொடிமரத்திற்கு அதமமான மரங்கள் – கமுகு, தென்னை, பனை.
- கொடிமரத்தில் 36 கணுக்கள் இருப்பின் சிறப்பு. நீளம் ஆலய அளவிற்கு
- ஏற்றவாறு இருத்தல் நலம்.
- கொடிமரமீன் தத்துவம் – யோகநிலைக்கு ஒப்பிடப்படுகிறது.
- கொடிமரத்தை யோகியின் முதுகெலும்பு (அ) மேருதண்டத்திற்கு ஒப்பிடுவர்.
கர்ப்பகிரகம் (மூலஸ்தானம்)
- இது எல்லா உலகங்களையும் படைத்தற்கு காரணமான மூலப்பிரகிருதியின் இடமாகும்.
- மூர்த்திக்கெதிரே மூர்த்தியின் வாகனமும், பின் ஒரு பலிபீடமும் அமைப்பர்.
- இது (பதி – இறை – மூர்த்தி), (பசு – உயிர் – வாகனம்), (பாசம் – தளை – பலிபீடம்) ஆகியவற்றை உணர்த்தும்.
சிவலிங்கம்
- லிங்கம் – குறி என்று பெயர்.
- எல்லாம் ஒடுங்கி மீண்டும் வெளிப்படுவதெனப் பொருள்.
- சிவலிங்கத்தின் அடிப்பாகம் நாற்கரம் – பிரம்மா. நடுப்பாகம் எண்கோணம் – விஷ்ணு, மேல் – நீண்ட வட்டவடிவம் – சிவன்.
- மும்மூர்த்திகளின் அடக்கமே சிவலிங்கம்.
- லிங்கம் 3 வகைப்படும். 1)நிஷ்களம் (அ) அவ்யக்தம் (அ) அரூபம் 2)சகலநிஷ்களம்
- (அ) வயக்தம் (அ) ரூபாரூபம் 3)சகளம் (அ) வயக்தம் (அ) ரூபம் (64 உருவம்)
- 64 ரூபத்தில் 24 ரூபம் முக்கியமானது என காரணகாமம் கூறுகிறது.
- சைலஜம் — கல்லால் செய்யப்படும் லிங்கம்.
- ரத்னஜம் — மாணிக்கம், மரகதத்தாலான லிங்கம்
- லோகஜம் — பொன், வெள்ளியாலான லிங்கம்
- க்ஷ ணிகம் – அரிசி, மணல், கோமியம், விபூதி, சந்தனத்தாலான லிங்கம். சிறிது நேரத்திற்கு பின் அழிந்துவிடும் எனப்பொருள்.
- லிங்கம் அது உண்டான காரணத்தை வைத்து ஆறு வகையாக பிரிக்கலாம். அவை 1)தேவிகம், 2)திவ்யம் 3)ஆர்ஷம் 4)மானுஷம் 5)இராட்சஷம் 6)பாணம்.
திருநந்திதேவர்
- நந்தி – எப்போதும் ஆனந்தத்திலிருப்பவர்.
- சைவ சமயத்தின் முதல் குரு – நந்தி
- உயிர்களை மஹாசம்ஹாரம் செய்யும் உரிமை நந்திக்கு உண்டு.
- நந்தி சிவசந்நிதியில் காவல் புரிகிறார். இவர் அனுமதிபெற்றே சிவதரிசனம்
- செய்யமுடியும்.
- நந்தியின் வேறுபெயர்கள் – தூயவன், சைலாதி, இடபதேவர்.
- தப்பு செய்தோரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்குண்டு.
- தட்ச யாகத்தில் சிவனை பழித்து பேசிய தட்சன், தேவர்களை சபித்தார்.
- நந்தியிடமிருந்து உபதேசம் பெற்றவர் சநத்குமாரர் சத்யஞானிதரிசினி
- பரஞ்சோதி மெய்கண்டார். இப்பரம்பரை திருக்கைலாய பரம்பரை எனப்படும்.
பலிபீடம் பலிபீடம்
- ஸ்ரீ பலி நாதர் எனப்படும். இது எட்டு மூலையிலும் ஒவ்வொன்று உள்ளது.
- தலைமை பலிபீடம் – நந்திக்குப் பின் உள்ளது.
தெட்சிணாமூர்த்தி
- சிவனின் குரு வடிவே இவர்.
- வேறுபெயர் – தென்முகக்கடவுள் (கர்ப்பகிரகத்தின் தென்பகுதியில் உள்ளதால்)
- கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர் 4 பேருக்கு உபதேசிப்பது போல், ஒரு கால் முயல் மிதித்தும், மற்றொன்று வீராஸனம் இட்டும், 4 கைகளோடு உள்ளார்.
- வலது கை 1 – சின் முத்திரை காட்டுகிறது.
- வலது கை 2 – ருத்ராட்ச மணிவடம் உள்ளது.
- இடது கை 1 – அமிர்த கலசம் உள்ளது
- இடது கை 2 – வேகம்.
- சின் முத்திரை என்பது – சுட்டு விரலால், பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற 3 விரல்களை ஒதுக்கி காட்டுவதேயாகும்.
- யோகநிலையிலிருப்பதால் – யோகதட்சிணாமூர்த்தி
- தும்புரு மற்றும் நாரதருக்கு வீணை இலக்கணம் உணர்த்தியதால் வீணாதட்சிணாமூர்த்தி என வேறுபெயர்கள் உண்டு.
- தட்சிணாமூர்த்தியை ‘ளுடைநவெ றுயவஉhநச” என அழைத்தவர் – பிளாவட்ஸ்கி அம்மையார்.
நடராஜர்
- நடராஜரின் வலக்காலில் மிதிபட்டுள்ள முயல் – அபஸ்மாரம்.
- பஞ்சலிங்க தலங்கள் பஞ்சலிங்க தலங்கள்
- பிருத்வி ( நிலம் ) — திருவாரூர்
- அப்பு ( நீர் ) – திருவானைக்காவல்
- தேயு ( தீ ) – திருவண்ணாமலை
- வாயு (காற்று) – காளஹஸ்தி
- ஆகாயம் – சிதம்பரம்
- ஆண்கள் ஆடும் கூத்து – தாண்டவம் எனப்படும்
- பெண்கள் ஆடும் கூத்து – இலாஸ்யம் எனப்படும்
- நடராசர் ஆடும் கூத்துகள் – கொடுகட்டி, பிண்டரங்கம், காபாலம் என மூன்றாகும்.
- மொத்தம் உள்ள தாண்டவங்கள் — 108 ஆகும்.
- திருநடன தத்துவம் – மாயையை ஓட்டி, கன்மம் சுட்டு, ஆணவத்தை அமுக்கி அருளால் ஆன்மாவை மேலே எடுத்து ஆனந்தக்கடலில் மூழ்கச் செய்வது.
இடம் | சபை | தாண்டவம் |
---|---|---|
சிதம்பரம் | பொன்னம்பலம் | ஆனந்த தாண்டவம் |
மதுரை | வெள்ளியம்பலம் | சந்தியா தாண்டவம் |
திருவாலங்காடு | ரத்தின சபை | ஊர்த்துவ தாண்டவம் |
திருநெல்வேலி | தாமிர சபை | காளிகா ( முனி ) தாண்டவம் |
குற்றாலம் | சித்திர சபை | திரிபுர தாண்டவம் |
- சேரமான் பெருமானுக்கு சிலம்பொலி காட்டி அருள்செய்ததும், சேக்கிழார்க்கு திருத்தொண்டர்புராணம் பாட ‘உலகெலாம்”என அடியெடுத்து கொடுத்ததும் – சிவனே.
- அம்பலவாணர்(நடராசர்) உருவம் ஐந்தெழுத்தைக் குறிக்கும். கூத்து ஐந்தொழிலைக் குறிக்கும்.
- அம்பலவாணர் திருமேனி ஆனந்தத்தையும், நிருத்தசபை துரிய அருணிலை தானத்தையும் குறிப்பன.
- சோமாங்கந்த திருவுருவம் ‘வயசி” என்னும் முக்திபஞ்சாக்கரத்தின் உருவகமாகும்.
- திருவாசி – ஓங்காரத்தையும், அதன் கண் உள்ள 51 சுடர்கள் அவ்வெண்ணிக்கையுள்ள மாத்ருகாக்கரங்களையும் குறிக்கும்.
முருகன்
- குறிஞ்சி நிலக் கடவுள்.
- அறுபடை வீடுகள் – 1)திருப்பரங்குன்றம் 2)திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்)
- 3)திருவாவினன்குடி (பழனி) 4)திருவேரகம் (சுவாமிமலை) 5)குன்றுதோறாடல் (திருத்தணி) 6) பழமுதிர்ச்சோலை.
- முருகு என்றால் – இளமை, அழகு, நறுமணம், தேன், கடவுள் தன்மை.
- முருகனது மூர்த்தங்கள் – சுப்பிரமணி, சண்முகன், ஞானசக்திதரன், தேவசேனாதிபதி, மயில்வாகனன்.
- முருகனின் 1-வது முகம் – இருளுடைய உலகை குற்றமில்லாததன் பொருட்டு பல கிரகணங்களை தோற்றுவித்தது.
- 2-வது முகம் — அன்பர்க்கு வேண்டும் வரம் தருதல்
- 3-வது முகம் — வேதம் தவறாத பிராமணர்க்கு யாகத்தில் தீங்கு வராமல் தடுக்க.
- 4-வது முகம் — வேதாகமத்தில் மறைந்துள்ளவற்றை ஆராய்ந்து போதித்து சந்திரன்
- போல் விளங்கும்.
- 5-வது முகம் — அசுரரை ஒழித்து போர் வேள்வியை வேட்டது.
- 6-வது முகம் – வள்ளியுடன் மகிழ்ச்சியை பொருந்திற்று.
- முருகனுக்கு கைகள் — 12.
- கொக்கறுகோ – சூரனாகிய மா மரத்தை வெட்டி வீழ்த்திய தலைவன்.
- வள்ளி (சுந்தரி), தெய்வானை(அமுதவல்லி) பூர்வஜென்மத்தில் திருமாலின் புதல்வியர்.
- சிவஞானபோதம் 8-ம் சூத்திரத்திலுள்ளதுபோல், உயிர் தன்னியல்பில்லாமல் கருவி இயல்பே என மயங்கும் போது இறைவன் ஆட்கொள்வான் என்பது – வள்ளி திருமண தத்துவம்.
சண்டிகேஸ்வரர்
- ஆலய இறுதி வழிபாடு.
- மும்முறை கைதட்டி வழிபடுவர்.
- வீடுபேறு விரும்புவோர் இவரை வழிபடலாம்.
- சோழநாட்டில் மண்ணியாற்றங்கரையில் சேய்ஞலூரில் எச்சதத்தனுக்கும், பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் – விசாரசருமர்.
- ஆற்று மணலில் லிங்கம் அமைத்து பாலாபிஷேகம் செய்தவர் – விசாரசருமர்.
- அதனால் அவர் தந்தை கோபத்தில் காலால் பால்குடத்தை இடற, விசாரசருமர் தந்தையை அடிக்க கோலெடுக்க, அது மழுவாய் மாறி கால்களை வெட்டியது.
- விசார சருமருக்கு முன் சிவன் தோன்றி கொன்றை மலரை இவருக்குச் சூட்டினார்.
- இவர் ஆழ்ந்த சிந்தனையில் ஆலயத்தின் வடபுறம் கோமுகிக்கருகே தனிக்கோயிலில் வீற்றிருப்பார். இவரருகே ஆலயத்திற்கு தேவையான நூல், திரி, நெய் போன்றவற்றை வைப்பர்.
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்