TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – கவுன்சிலிங் தேதி அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தமிழ்நாடு சட்டப் பேரவை செயலக சேவையில் ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிகளுக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவுன்சிலிங்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு 21.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் தேர்வு நடத்தப்பட்டது.
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, 12.05.2023 அன்று ORAL TEST நடத்தப்பட்டது. தற்போது அடுத்தகட்டமாக கவுன்சிலிங் குறித்த MEMO வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்கட்ட கவுன்சிலிங் 24.05.2023 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரியில் நேரில் சென்று கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.