TNPSC குரூப் 4 தேர்வு – கூடுதலாக பணியிடங்களை நிரப்ப முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் குரூப் 4 போட்டி தேர்வின் மூலமாக 15,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
குரூப் 4:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசு துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக தேர்தல் அறிக்கையின் போது குறிப்பிடப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட தற்போது வரைக்குமே 10,000 காலி பணியிடங்கள் கூட நிரப்பப்படாமல் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TNPSC Agricultural Officer Exam – தேர்வர்களே உங்களுக்கு தான் ஜாக்பாட்!
மேலும், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக போட்டித் தேர்வுகளின் மூலமாக எந்த காலி பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற்று விட்டனர். இதனால் தமிழகத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4.5 லட்சமா உயர்ந்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக இருக்கும் போது கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டி தேர்வின் மூலமாக 10,117 காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் இது பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 போட்டி தேர்வு அடிப்படையில் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டே நடத்தி 50000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள பதவிகளுக்கான போட்டித் தேர்வினை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிட்டு அதற்கான காலி பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.