TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 25,000 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

0
TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 25,000 காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப கோரிக்கை!
TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 25,000 காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப கோரிக்கை!
TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 25,000 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

தமிழக அரசு துறையில் குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விரைவில் கலந்தாய்வு நடத்த பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 4:

தமிழகத்தில் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வின் கீழ் ஆண்டுதோறும் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருட இடைவெளிக்கு பிறகு 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

இந்த முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் விரைந்து கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,000 பேரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!