TNPSC குரூப் 4 தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக்? பரபரப்பு தகவல்கள்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். இந்நிலையில் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வந்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் லீக்:
தமிழகத்தில் கடந்தாண்டு ஜூலை 27 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்பதால் சுமார் 18 லட்சத்துக்கு மேற்பட்ட தேர்வர்கள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஏழு மாத தாமதங்களுக்கு பிறகு மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
அதாவது தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த 2000 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700கு மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் அல்லாமல் தற்போது கருவூல அதிகாரிகள் துணையுடன் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது மயிலாடுதுறையை சேர்ந்த பல இளைஞர்கள் தென்காசியில் தேர்வு எழுதியதும் தற்போது தெரிய வந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்கள் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் கருவூலங்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்படும் நிலையில் கருவூலக அதிகாரிகள் துணையுடன் இந்த முறைகேடு நடந்திருக்கும் என தகவல் வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலதரப்பட்ட மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இதே நிலைமை நீடித்து வருவதால் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீது உள்ள நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது.
Exams Daily Mobile App Download