3000 பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, ஜனவரி மாதத்தில் குரூப் 1 தேர்வு , விவசாய அலுவலர் (Agriculture Officer), உதவி இயக்குனர் (Assistant Director), உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Horticultural Officer) ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 2 Details
இதில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20ல் வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. எஞ்சிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மார்ச் மாதம் தொடங்கி விட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணி தேர்வுக்கான அறிவிப்பும் இன்னும் வரவில்லை. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் காரணமாக, புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் காலதாமானது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்பட்டுருக்க வேண்டிய அனைத்து அறிவிப்புகளும் ஒவ்வென்றாக ஏப்ரல் மாதத்துக்கள் வெளியிடப்படும்.
2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையில், குறிப்பிடப்பட்டுள்ள படி, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மே மாதத்தில் வெளியாகும். இதன் மூலம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் நிரப்பிட உள்ளதாக, TNPSC ஆணையம் தெரிவித்துள்ளது.
Download Official Press News Pdf
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |